அனாவசியமானவற்றை அகற்றிட ஆவி தாரும்
பெலவீன பகுதிகளில் பெலப்பட உம் பெலன் தாரும்
அங்கங்களையும் அந்தரங்கங்களையும் ஆவியால் நிரப்பும்
தவறின பகுதிகளில் திடன் கொள்ள தீவிர படுத்தும்
உதறி தள்ளினவைகளை (மீண்டும்) உரிமை பாராட்டாமல் இருக்க உதவி செய்யும்
விட்டுவிட்டவைகளை வீண் என எண்ண எழுச்சி தாரும்
மன்னுக்குரியவைகளை மறந்திட உம் மகிமையால் நிரப்பும்
வின்னுக்குரியவைகளை விடாதிருக்க விசுவாசத்தால் நிரப்பும்
மாமிச சிந்தை எழாதபடி மறுரூபப் படுத்திவிடும்
ஆவியின் சிந்தை மேலோங்கிட முற்றிலும் ஆட்கொண்டுவிடும்
பரிசுத்தத்தை காத்திட பரமனே பாதுகாத்திடும்
பரவசத்தை அல்ல பரிசுத்தத்தை நாடிட செய்திடும்
நித்தியத்தை தேடிட நித்தம் நின் சிந்தையால் நிறைத்திடும்
பரலோகம் சேர்ந்திட வாலிபர்களை சேர்த்திட செய்திடும்
Technorati Tags: Tamil Christian Poem,Youth Prayer
No comments:
Post a Comment