உம்மை ஆண்டவர் என்று அறிக்கையிட்டு என் வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் உம் ஆளுகைக்குள் கொடாதிருந்தால் நான் ஆழமற்றவன்னாவேனே
உம்மை பரிசுத்தர் என்று போற்றிவிட்டு நான் பாவத்திலேயே ஜீவித்தால் நான் பொய்யன்னாவேனே
உம்மை நேசர் என்று சொல்லிவிட்டு என் நேசத்தை உலகத்தின் மீதே வைத்திருந்தால் நான் நேர்மையற்றவன்னாவேனே
உம்மை மீட்பர் என்று மகிமைப்படுத்திவிட்டு நான் மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு வாழவில்லை என்றால் நான் மகிமையிழந்தவன்னாவேனே
உம்மை சர்வவல்லவர் என்று சொல்லிவிட்டு சாதாரன மனிதனையே சார்ந்திருந்தால் நான் சாரமற்றவன்னாவேனே
உம்மை (ஒரே) மத்தியஸ்தர் என்று மகிமைப்படுத்திவிட்டு மனிதன் முன்னே மண்டியிட்டிருந்தால் நான் மாய்மாலக்காரனாவேனே
உம்மை பிரியமே என்று பிரசங்கித்துவிட்டு (உமக்கு) பிடிக்காத நட்பைப் பிறரோடு கொண்டிருந்தால் நான் வெள்ளையடிக்கப்பட்ட பிரேதக்குளிப்போல்லாவேனே
உம்மை பரத்துக்கேரினவர் என்று பாடிவிட்டு பரத்திற்குரிய சிந்தையற்றவனாய் வாழ்ந்து வந்தால் நான் பாருக்குரியவன்னாவேனே
உம்மை மகிமையின் தேவன் என்று மகிமைப்படுத்திவிட்டு மண்ணுக்குரியவைகளையே முக்கியமாய் கருதி வந்தால் நான் மாய்மாலக்காரனாவேனே
உம்மை பறைசாற்றும் வன்னம் வாழ்ந்தால் பிரசங்கிக்கும் வன்னம் திகழ்ந்தால் கர்த்தரே உம்மைப் போல்லாவேனே
No comments:
Post a Comment