Monday, November 24, 2014

வாலிபனின் ஜெபம்–12: விட்டு விட்டேன்

Remorse

கல்வாரியை பாடிவிட்டு எப்படி நான் கயவனாய் இருந்தேன்?
பரிசுத்தர் என்று போற்றிவிட்டு எப்படி நான் பரிசுத்தம் இழந்தேன்?

மார்போடு அனைத்தவரை விட்டு விட்டு எப்படி நான் மாயலோகத்தை தேடிப்போனேன்?
மகிபனை மகிமைப் படுத்திவிட்டு எப்படி என் மனம் மாசுப்பட விட்டு விட்டேன்?

வருகையை பேசிவிட்டு வருபவரைத் தேடாமல் எப்படி இருந்தேன்?
வின்னுக்குரியவரை போற்றிவிட்டு வீனானவைகளை ஏன் நாடிப் போனேன்?

உதடுகளால் பாடிவிட்டு உள்ளத்தால் ஏன் தூரப்போனேன்?
தூயவர் என்று துதித்துவிட்டு உள்ளத்தால் ஏன் துரோகம் செய்தேன்?

தினம் காலை மாலை ஆராதனையும் வேத வாசிப்பையும் விட்டு விட்டேன்
திடம் பெற பரிசுத்தாவியின் நிறைவை நாடாமல் இருந்து விட்டேன்

கண்களுக்கு காவல் வைக்க மறந்து விட்டேன்
கண்ணியமாய் வாழ கல்வாரி அன்பில் நிறைய மறந்து விட்டேன்

விட்டு விட்டவைகளை விடாமல் செய்ய தீர்மானித்து விட்டேன்
வருகையில் சேர்ந்திட அநேகரை சேர்த்திட வருபவரை நாடிவிடேன்


No comments:

Post a Comment