Wednesday, November 28, 2012

வாலிபனின் ஜெபம்–4 (தெரிந்தெடுக்கிறதே!)

தெரிந்தெடுக்கிறதே

Wasted Choices

நீர் என்னை பெரிய காரியங்களுக்காய் தெரிந்து கொண்டீர்

ஆனால் நிர்பந்தமான என் மனமோ அர்ப்பமானவைகளை தெரிந்தெடுக்கிறதே


பரிசுத்தமான வாழ்வு வாழ என்னைத் தெரிந்து கொண்டீர்
ஆனால் பாவச் சிற்றின்பங்களை என் மனம் தெரிந்தெடுக்கிறதே

பரலோக சிந்தைக் கொண்டிருக்க தெரிந்து கொண்டீர்
ஆனால் பாவச் சிந்தையை என் மனம் தெரிந்தெடுக்கிறதே
 
உம்மோடு சம்பாஷனை செய்ய என்னைத் தெரிந்து கொண்டீர்
அனால் உள்ளமோ சபலத்தை தெரிந்தெடுக்கிறதே
 
உமது பிரியத்தால் என்னைத் திருப்திப்படுத்த தெரிந்து கொண்டீர்
ஆனால் உலகத்தின் பிரியத்தை என் உள்ளம் திரும்பத் திரும்ப தெரிந்தெடுக்கிறதே

உமது உறவில் மகிழ்ந்திருக்க என்னைத் தெரிந்து கொண்டீர்
ஆனால் உலகத்தின் உறவில் இச்சைகளில் மகிழ்ந்திருப்பதை என் உள்ளம் தெரிந்தெடுக்கிறதே

ஒதுக்கப்பட்டு வெறுக்கப்பட்ட என்னைத் உமக்காக தெரிந்து கொண்டீர்
ஆனால் ஒவ்வொருவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதையே என் உள்ளம் தெரிந்தெடுக்கிறதே

பாதாளத்தை நோக்கி விரைவாய் செல்பவரை தேட மீட்க தெரிந்து கொண்டீர்
ஆனால் பாவத்தை நோக்கி விரைவாய் செல்வதை தேகம் மனம் தெரிந்தெடுக்கிறதே
 
You chose me
 
உலகத்திற்கு உப்பாக ஒளியாக இருந்து சுவை தர வெளிச்சம் வீச தெரிந்து கொண்டீர்
ஆனால் உப்பு சாரமற்றுப் போய் ஒளி இருளாகி போனதால் தெரிந்து கொள்ளுதல் வீணாகி போய்விட்டதே

பரிசுத்தத்தை காத்துக்கொண்டு பூலோக பிரஜைகளை பரலோக பிரஜைகளாய் மாற்ற தெரிந்து கொண்டீர்
ஆனால் பரிசுத்தத்தை கைவிட்டு பாவ பழக்கத்தில் பிரவேசித்ததால் தெரிந்து கொள்ளுதல் வீணாகி போய்விட்டதே

சிந்தையில் சிலுவைப் பாடுகளை சிந்தித்து சிறுமைப்பட்டவர்களை சீஷர்களாக்க தெரிந்து கொண்டீர்
ஆனால் சிந்திய இரத்தமும் சிலுவையின் கொடுமையும் மறந்து போனதால் தெரிந்து கொள்ளுதல் வீணாகி போய்விட்டதே

ஆத்துமப் பாரம் கொண்டு மனம் போல் வாழ்பவர்களை மகிமையின் மன்னவனிடத்தில் சேர்க்க தெரிந்து கொண்டீர்
ஆனால் ஆத்துமப் பாரம் மறைந்து ஆடம்பரம் பெருகி ஆனவம் ஆட்கொண்டதால் தெரிந்து கொள்ளுதல் வீணாகி போய்விட்டதே
 
Repentance
 
தெரிந்து கொள்ளுதலை திரும்பிப் பார்க்க செய்து உம்மிடம் திரும்பிட செய்திடும்
சீர்கெட்ட வாழ்வை சீர்தூக்கி பார்த்து சிலுவையண்டை சேர்ந்திட செய்திடும்

இழந்தப் பாரத்தை பெற்றிட இழிவானவைகளை விட்டிட செய்திடும்
இனித் தூரம் போகாமல் உம்மிடம் திரும்பிட உம்மோடு என்றும் இருந்திட செய்திடும்

மண்ணுலக மாயைகளை மாசாக என்னி மறந்திட செய்திடும்
மன்னவனையே தேடி மன்னாவாம் வேதத்தையே தியானித்திட செய்திடும்

பலவிதப் பாவப் சோதனைகளை பரமனின் ஆவியின் பெலத்தால் வென்றிட செய்திடும்
பரலோக பாவனை கொண்டிட நித்தியத்தை சிந்தித்து நிதானித்து நடந்திட செய்திடும்

Tuesday, November 13, 2012

தீபத் திருவிழாவாம் தீபாவளி!

Deepavali Fireworks

தீபாவளி என்றாலே மனதில் வருவது பட்டாசு
ஆசையாய் கொளுத்தினாலும் கரியாய் போவதோ காசு
ஆசை தீர கொளுத்தினாலும் திருப்தியடையாது மனசு
திரும்பத் திரும்ப தேடுவார் பட்டாசு வகைகளில் புதுசு

தீபாவளி வந்தாலே எல்லா கடைகளிலும் அமோக விற்பனை
கடை கடையாய் ஏரியும் பூர்த்தியாகாத வீட்டாரின் நிபந்தனை
கட்டி கட்டி போட்டு போட்டு பார்த்தாலும் திருப்தியடையாததால் மன வேதனை
திரும்பவும் கடைக்குப் போய் மாற்றிவிட்டு வந்தால் சாதனை
 
தீபாவளி என்றாலே வீடுகள் தோறும் செய்யப்படும் பலகாரம்
வகை வகையாய் ருசி ருசியாய் சாப்பிட்டாலும் மாறாததோ மன பாரம்
வாரந்தோறும் விழாதோறும் கோயிலுக்குப் போய் செய்வார் பரிகாரம்
திரும்பத் திரும்ப செய்தும் மறைந்து போகாததோ பாவ தோஷம்
 
தீபாவளி வந்தால் சேர்ந்தே வந்திடும் புதுப் படம்
முன் பதிவு செய்தோ வரிசையில் நின்றோ பார்த்திட போராட்டம்
மூன்று மணி நேரம் பார்த்தும் நிரம்பாத மனதின் வெற்றிடம்
திரும்பத் திரும்ப பார்த்தாலும் வெறுமை வாட்டி வதைத்திடும்
 
தீபாவளி என்றால் தீபங்களால் வீடுகள் அலங்கரிக்கப்படும்
வீட்டை தீபம் அலங்கரித்தாலும் உள்ளமோ இருளடைந்திருக்கும்
விண்ணவரின் ஒளி உள்ளத்தில் உதித்து உருமாற்றாத மட்டும் 
தீபாவளி தீபம் வெறும் வெளிப்படை வேஷமாய் இருந்துவிடும் 
 
பட்டாசை அல்ல மனதில் உள்ள அசிங்கத்தை கொளுத்த வேண்டும்
புது ஆடைகள் அல்ல புதிய மனுஷனாய் மாற வேண்டும்
பலகாரங்கள் ருசியாய் செய்வதல்ல வாழ்க்கை ருசியாய் மாற வேண்டும்
புதுப் படம் பார்ப்பதல்ல புதிய நற்குணங்கள் வெளிப்பட வேண்டும்
 
தீராத சாபம் தீராத தோஷம் நீங்கிட மனந்திரும்பிடு
தீப ஒளியை ஏற்றிவைக்கும் கரங்களால் வேதாகமத்தை ஏந்திடு
தீய பழக்கங்கள் அகன்றிட எரிந்திட இயேசுவை ஏற்றிடு
தீய மனம் மாறிட உன் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்திடு

Tuesday, October 23, 2012

வாலிபனின் ஜெபம்–3 (மாற்றும் தேவன்)

மாற்றும் தேவன்

Prayer

தோல்வியுற்றவனை துவண்டுவிடாதபடி தூக்கி நிறுத்துபவரே

பாவத்தில் விழுந்தவனை பரிசுத்தத்துக்கு அழைப்பவரே
 
பாவத்தை பார்க்ககூடாத சுத்த கண்னராகிய நீர்
பாவத்தில் வாழ்பவரை சுத்தம் செய்ய வந்தீர்
 
எவரும் தூக்கக்கூடாத இருள் நிறைந்த பாவ படுகுழியில் கிடப்பவனை
யாரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்பவர் தூக்கி விட்டீரே
 
மனம் தளர்ந்து இருள் நிறைந்து தன்னம்பிக்கை இழந்தவன் வாழ்வில்
மணம் சேர்த்து ஒளி நிறைத்து நம்பிக்கை கொடுத்து விட்டீரே
 
தன்னையும் கெடுத்து பிறரையும் கெடுத்து வாழ்ந்தவனை
தன் அன்பால் நிறைத்து அனைவருக்கும் ஆசிர்வாதமாய் மாற்றி விட்டீரே


Thursday, October 18, 2012

வாலிபனின் ஜெபம் - 2

Youth Praying

அனாவசியமானவற்றை அகற்றிட ஆவி தாரும்

பெலவீன பகுதிகளில் பெலப்பட உம் பெலன் தாரும்
 
அங்கங்களையும் அந்தரங்கங்களையும் ஆவியால் நிரப்பும்
தவறின பகுதிகளில் திடன் கொள்ள தீவிர படுத்தும்
 
உதறி தள்ளினவைகளை (மீண்டும்)  உரிமை பாராட்டாமல் இருக்க உதவி செய்யும்
விட்டுவிட்டவைகளை வீண் என எண்ண எழுச்சி தாரும்
 
மன்னுக்குரியவைகளை மறந்திட உம் மகிமையால் நிரப்பும்
வின்னுக்குரியவைகளை விடாதிருக்க விசுவாசத்தால் நிரப்பும்
 
மாமிச சிந்தை எழாதபடி மறுரூபப் படுத்திவிடும்
ஆவியின் சிந்தை மேலோங்கிட முற்றிலும் ஆட்கொண்டுவிடும்
 
பரிசுத்தத்தை காத்திட பரமனே பாதுகாத்திடும்
பரவசத்தை அல்ல பரிசுத்தத்தை நாடிட செய்திடும்
 
நித்தியத்தை தேடிட நித்தம் நின் சிந்தையால் நிறைத்திடும்
பரலோகம் சேர்ந்திட வாலிபர்களை சேர்த்திட செய்திடும்

Saturday, January 14, 2012

பொங்கலோ பொங்கல்

 

pongal

பானையில் உள்ள பொங்கல் பொங்கி வழிவது போல

என் உள்ளம் சந்தோஷத்தால் பொங்கி வழிகின்றது

 

பொங்கல் பொங்குவதற்கு காரணம் சூடு

உள்ளம் பொங்குவதற்கு காரணம் இயேசு

 

பொங்கல் பொங்குவது உஷ்ணத்தால்

உள்ளம் பொங்குவது சந்தோஷத்தால்

 

பானையிலிருந்து பொங்கி வழிவது அரிசி

உள்ளத்திலிருந்து பொங்கி வழிவது மகிழ்ச்சி

 

பொங்கலை ருசித்தால் இனிப்பு

இயேசுவை ருசித்தால் இரட்சிப்பு

 

பொங்கலோடு சாப்பிடுவோம் கரும்பு

உள்ளதோடு இயேசு வந்தால் போய்விடும் குறும்பு

 

பொங்கல் பொங்கும் பண்டிகை தோறும்

உள்ளமோ பொங்கும் தினந்தோறும்

 

பொங்கலை பொங்க தேவை பாத்திரம் - உன்

உள்ளம் பொங்க தேவை இயேசு மாத்திரம்

 

Pongal Kolam

பொங்கல் கொண்டாடுவர் தை மாதத்தில்

உலகம் மூழ்கி கிடக்கிறது பாவத்தில்

 

பொங்கலின் முதல் நாள் போகி

நாம் எல்லோரும் ஒரு பாவி

 

பொங்கலன்று வீட்டிற்கு முன் போடுவார் கோலம்

நித்திய சந்தோஷத்தையும் நித்திய வாழ்வையும் இழப்பதற்கு காரணம் பாவம்

 

பழையன கழிதலும் புதியன புகுதலும் போகி

பழைய சுபாவம் மாறுவதற்கு இயேசுவே வழி

 

அறியாதோர் பொங்கலை படைப்பர் சூரியனுக்கு

அறிந்து ஒப்புக்கொடு உன்னை - உன்னையும் சூரியனையும் படைத்த ஆண்டவனுக்கு

 

தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பர்

பாவத்தை இயேசுவிடம் அறிக்கையிட்டால் நித்திய வாழ்வை பெறுவர்

 

பொங்கல் தமிழரால் கொண்டாடப்படும் பண்டிகை

இயேசுவே உலகத்தின் அனைவருக்கும் தரக்கூடும் நம்பிக்கை

 

பொங்கலின் கடைசி நாளாக கொண்டாடுவர் காணும் பொங்கலை

உலகத்தின் கடைசி நாளில் அனைவரும் காண்பர் இயேசுவின் இரண்டாம் வருகையை