வெறுமையான என்னை வெறுத்துத் தள்ளாதேயும்
பாவியான என்னைப் பிரித்து விடாதேயும்
அடிமையான என்னை அலட்சியப்படுத்தாதேயும்
சாரம்போன என்னை சோர்வுரச்செய்யாதேயும்
வெறுத்துத் தள்ளவா என்னை வெறுமையாக்கினேன்?
பிரித்து விடவா என்னை பலியாக்கினேன்?
அலட்சியப்படுத்தவா அந்தக் கொடூரக் கோளம் அடைந்தேன்?
சோர்வுரச்செய்யவா நான் சிலுவையைச் சுமந்தேன்?
உம்மை விட்டு நான் தூரம்போனவன்
அவலட்சனங்களில் நான் அகப்பட்டவன்
உம் அன்பிற்கு நான் தகுதியற்றவன்
ஆண்டவரே உமக்குத் துரோகம் செய்தவன்
உன்னை எனதாக்கவே பரம்மிரங்கி வந்தேன்
உன்னை விடுவிக்கவே நான் சிறைப்பட்டேன்
உன்னை நீதிமானாக்கவே என் ஜீவன் ஈன்றேன்
உன்னை மாற்றவே நான் மாண்டு உயிர்த்தெழுந்தேன்
சிலுவையின் தியாகத்தைத் தியானித்திடுவேனே
சிந்தின திருஇரத்தத்தை மறந்திடேனே
சீர்கெட்ட வாழ்வைச் சீர்தூக்கிப் பார்ப்பேனே
சிறந்த வாழ்வு வாழச் சிலுவையன்டை வருவேனே
பெற்ற மன்னிப்பின் விலைக்கிரையத்தை மறந்திடாதே
பின்நிலைமை மோசமாகாதபடி இனி பாவம் செய்யாதே
பரிசுத்தாவியின் நிறைவில் தினமும் வாழ்ந்திடு
பரிசுத்தத்தையே வாஞ்சித்து பாரில் சாட்சி பகர்ந்திடு