Wednesday, December 4, 2013

பதுங்கி பதுங்கி, பயந்து பயந்து!

Hidden

பாவம் செய்தும் மனதில் சஞ்சலம் ஏற்படாமல் இருக்கிறாயோ?
பரிசுத்த வேதாகமத்தைப் படித்தும் வெளிச்சம் கிடைக்காமல் தவிக்கிறாயோ?

பாதைகள் இருந்தும் போவது எதில் என்று தெரியாமல் திக்காடுகிறாயோ?
பாவக் குழி என்று தெரிந்தும் அதற்குள் செல்வதையே தெரிந்தெடுக்கிறாயோ?

பார் பார்க்க பரிசுத்தவானாய் காட்டிக்கொண்டு பாவத்திலேயே வாழ்கிறாயோ?
பார்த்திடக் கூடாது என்று பதுங்கி பதுங்கி பாவத்தை பருகுகிறாயோ?

பாவத்திலே கிடக்கிற உனக்கு பரிசுத்த வாழ்வு எதற்கு என்ற பிசாசின் சத்தம் கேட்கிறதோ?
பாவத்தை மன்னித்து பரிசுத்தமான புது வாழ்வு தருகிறேன் என்ற பரமனின் சத்தம் கேட்கவில்லையோ?

 

பயந்து பயந்து பாவத்திலே வாழ்ந்த வாழ்வு போதும் என்று முடிவு செய்
பரிசுத்தமாய் வாழவே தெரிந்துக்கொள்ளபட்டாய் என்பதை நித்தமும் நினைவில் வை

பார்வையோடு யோபுவை போல உடன்படிக்கை செய்திடு
பார்த்து பார்த்து பழகிப்போனவைகளை விட்டிடு

பரிசுத்த வேதாகமத்தை இரவும் பகலும் தியானித்திட தீர்மானித்திடு
பொக்கிஷமாய் பரிசுத்த வார்த்தைகளை இருதயத்தில் வைத்து வைத்திடு

பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் முற்றிலுமாய் ஒப்புக்கொடுத்திடு
பரிசுத்த ஆவியின் நிறைவில் நித்தமும் வாழ்ந்திடு