Wednesday, December 4, 2013

பதுங்கி பதுங்கி, பயந்து பயந்து!

Hidden

பாவம் செய்தும் மனதில் சஞ்சலம் ஏற்படாமல் இருக்கிறாயோ?
பரிசுத்த வேதாகமத்தைப் படித்தும் வெளிச்சம் கிடைக்காமல் தவிக்கிறாயோ?

பாதைகள் இருந்தும் போவது எதில் என்று தெரியாமல் திக்காடுகிறாயோ?
பாவக் குழி என்று தெரிந்தும் அதற்குள் செல்வதையே தெரிந்தெடுக்கிறாயோ?

பார் பார்க்க பரிசுத்தவானாய் காட்டிக்கொண்டு பாவத்திலேயே வாழ்கிறாயோ?
பார்த்திடக் கூடாது என்று பதுங்கி பதுங்கி பாவத்தை பருகுகிறாயோ?

பாவத்திலே கிடக்கிற உனக்கு பரிசுத்த வாழ்வு எதற்கு என்ற பிசாசின் சத்தம் கேட்கிறதோ?
பாவத்தை மன்னித்து பரிசுத்தமான புது வாழ்வு தருகிறேன் என்ற பரமனின் சத்தம் கேட்கவில்லையோ?

 

பயந்து பயந்து பாவத்திலே வாழ்ந்த வாழ்வு போதும் என்று முடிவு செய்
பரிசுத்தமாய் வாழவே தெரிந்துக்கொள்ளபட்டாய் என்பதை நித்தமும் நினைவில் வை

பார்வையோடு யோபுவை போல உடன்படிக்கை செய்திடு
பார்த்து பார்த்து பழகிப்போனவைகளை விட்டிடு

பரிசுத்த வேதாகமத்தை இரவும் பகலும் தியானித்திட தீர்மானித்திடு
பொக்கிஷமாய் பரிசுத்த வார்த்தைகளை இருதயத்தில் வைத்து வைத்திடு

பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் முற்றிலுமாய் ஒப்புக்கொடுத்திடு
பரிசுத்த ஆவியின் நிறைவில் நித்தமும் வாழ்ந்திடு


Monday, November 25, 2013

நான் மாய்மாலக்காரனாவேனே!

Hypocrite

உம்மை ஆண்டவர் என்று அறிக்கையிட்டு என் வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் உம் ஆளுகைக்குள் கொடாதிருந்தால் நான் ஆழமற்றவன்னாவேனே

உம்மை பரிசுத்தர் என்று போற்றிவிட்டு நான் பாவத்திலேயே ஜீவித்தால் நான் பொய்யன்னாவேனே

உம்மை நேசர் என்று சொல்லிவிட்டு என் நேசத்தை உலகத்தின் மீதே வைத்திருந்தால் நான் நேர்மையற்றவன்னாவேனே

உம்மை மீட்பர் என்று மகிமைப்படுத்திவிட்டு நான் மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு வாழவில்லை என்றால் நான் மகிமையிழந்தவன்னாவேனே

உம்மை சர்வவல்லவர் என்று சொல்லிவிட்டு சாதாரன மனிதனையே சார்ந்திருந்தால் நான் சாரமற்றவன்னாவேனே

உம்மை (ஒரே) மத்தியஸ்தர் என்று மகிமைப்படுத்திவிட்டு மனிதன் முன்னே மண்டியிட்டிருந்தால் நான் மாய்மாலக்காரனாவேனே

உம்மை பிரியமே என்று பிரசங்கித்துவிட்டு (உமக்கு) பிடிக்காத நட்பைப் பிறரோடு கொண்டிருந்தால் நான் வெள்ளையடிக்கப்பட்ட பிரேதக்குளிப்போல்லாவேனே

உம்மை பரத்துக்கேரினவர் என்று பாடிவிட்டு பரத்திற்குரிய சிந்தையற்றவனாய் வாழ்ந்து வந்தால் நான் பாருக்குரியவன்னாவேனே

உம்மை மகிமையின் தேவன் என்று மகிமைப்படுத்திவிட்டு மண்ணுக்குரியவைகளையே முக்கியமாய் கருதி வந்தால் நான் மாய்மாலக்காரனாவேனே

உம்மை பறைசாற்றும் வன்னம் வாழ்ந்தால் பிரசங்கிக்கும் வன்னம் திகழ்ந்தால் கர்த்தரே உம்மைப் போல்லாவேனே


Tuesday, July 9, 2013

வாலிபனின் ஜெபம்–9 (Youth Prayer): பெருமைப் பாராட்ட முடியுமா?

பெருமைப் பாராட்ட முடியுமா?

Humble before God

பாவியான என்னை பரிசுத்தனாக்கியது நீர்
தகுதியில்லாத என்னை தகுதிப்படுத்தியது நீர்
 
தள்ளப்பட்ட என்னை தாலந்துகளால் நிரப்பினது நீர்
சிறுமைப்பட்ட என்னை சீற்படுத்தினது நீர்

பிசாசுக்கு அடிமையாயிருந்த என்னை பரமப்பிதாவின் அன்பனாய் மாற்றியது நீர்
பயனற்றவனாய் இருந்த என்னை பயன்படுத்துவது நீர்
 
கேவலமான என்னை கிருபைகளால் நிரப்பியது நீர்
மண்ணுக்குரியவனான என்னை மகிமையால் நிரப்பியது நீர்

நாறிப்போன என்னை நேசித்தவர் நீர்
வறண்டிருந்த என்னை வாழ வைத்தது நீர்
 
அலைந்து கொண்டிருந்த என்னை அழைப்பால் ஸ்திரப்படுத்தியது நீர்
வறண்ட நிலமான என்னை வாய்க்கால்களாய்  மாற்றியது நீர்

இருளாய் இருந்த என்னை இவ்வுலகத்திர்க்கு ஒளியாய் மாற்றியது நீர்
தாகமுற்றிருந்த என்னை திருவசனத்தால் திருப்திப்படுத்தியது நீர்

 
 
இவ்வளவும் நீர் செய்திருக்க இறுமாப்பாய் நான் இருக்க முடியுமா?
பலவற்றையும் நீர் தந்திருக்க நான் பெருமைப் பாராட்ட முடியுமா?

 
 
உம்மோடு இசைந்திட உம்மையே பரைசாற்றிட செய்திடும்
உம் பணி செய்து உமக்கே மகிமைச் சேர்த்திட செய்திடும்
 

Saturday, July 6, 2013

வாலிபனின் ஜெபம்–8 (Youth Prayer)

விண்ணுக்குரியவனாய் மாற்றியருளும்

 
விண்ணுக்குரியவனாய் மாற்றியருளும்

 

 

வழிநடத்தும் வல்ல ஆண்டவரே

உம் வழிகளை காண்பித்தருளும்

வழுவாமல் காப்பவரே

உம் வல்லமையால் நிரப்பியருளும்

வானாதி வானவரே
வாழ்வில் உம் வெளிச்சம் தந்தருளும்
வானத்திற்க்கேரினவரே
விண்ணுக்குரியவனாய் மாற்றியருளும்
 
வீண் சிந்தையையும் செய்கையையும் விட்டிட
விண் சிந்தையால் நிரப்பியருளும்
வீண் போகாமல் காப்பவரே
விழாமல் காத்தருளும்

வாலிபனாய் வாழ்ந்தவரே
வாலிபத்தைக் கரையில்லாமல் காத்திட கிருபையருளும்
வாலிபத்தைத் தருகிறேன்
வல்லமையாய் பயன்படுத்தியருளும்

விரோதமான கையெழுத்தை மாற்றினவரே
வீணானவைகளுக்கு  திரும்பாமல் காத்தருளும்
விரோதிகளை நேசித்தவரே
உம்மைப்போல் நேசிக்க மனம் தந்தருளும்

(தாவீதின்) வேராக வந்தவரே
வேர்பிடிக்கச் செய்தருளும்
விசைப்படகான வாழ்வை
பரிசுத்த ஆவியின் காற்றால் செலுத்தியருளும்

Friday, April 26, 2013

வாலிபனின் ஜெபம்–7 (Youth Prayer)

Praying Youth_Repentance

ழைத்த தேவனையும் உன் அழைப்பையும் மறந்து போனாயோ?

ழத்தில் கிடந்த உன்னை தூக்கி எடுத்தாரே நினைவில்லையோ?

 

ருளாய் இருந்த உன் வாழ்வை வெளிச்சமாய் மாற்றினாரே மறந்து போனாயோ?
வாய் புது வாழ்வு கொடுத்தாரே தொழைத்து விட்டாயோ?
 
ன் பாவத்தை சுமந்து உனக்காய் மரித்தாரே மறந்து போனாயோ?
தாரியாய் இருந்த உன்னை உலகத்திற்கு உப்பாய் மாற்றினாரே உணர்வில்லையோ?
 
த்தனை நாட்கள் தான் இப்படி இரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பாய்?
ற்று கொண்ட தேவனை எத்தனை நாட்கள் தான் ஏமாற்றிக் கொண்டிருப்பாய்?
 

யத்தோடும் வெட்கத்தோடும் வாழவா உன்னை மீட்டெடுத்தார்?

 
ப்புக்கொடுத்திடு ஒருவிசை உன் வாழ்வை கர்த்தர் சீர்படுத்திட
ர் வளமான வாழ்வாய் கனிதரும் மரமாய் மாற்றி ஸ்திரப்படுத்திடுவார்
 
ஷதமாம் தேவ வார்த்தை உன் வாயை உன் மனதை உன் வாழ்வை நிறைத்து நடத்திட தீர்மானித்திடு

Saturday, April 20, 2013

வாலிபனின் ஜெபம்–6 (Youth Prayer)

 

Youth Quest

தேவனுக்குக் காத்திருப்பதை விட்டு விட்டு

தேவையில்லாத போனுக்காகவும் எஸ்.எம்.எஸ்.-காகவும் காத்திருக்கிறாயோ?

 

தேடி வந்து மீட்டவரை மறந்து விட்டு

தேடிப் போய் பாவத்தினால் வீணாய் போவதை நாடுகிறாயோ?

 

தேவையுள்ள தேசம் உன் முன் திறந்து கிடக்கையில்

தேங்கி போன நிலையில் உன் அறைக்குள் பூட்டிக் கிடக்கிறாயோ?

 

தேற்றறவாளனை தேவன் உனக்கு உனக்குள் தந்திருக்க

தேற்றிடுவார் உண்டோ என்று ஏங்கி நிற்கிறாயோ?

 

தேசமே பாவத்தினால் பாழாய் போய்க் கொண்டிருக்கையில்

தேகத்தின் சுகத்தை இன்பத்தை நாடிக் கொண்டிருக்கிறாயோ?

 

 

 

தேவனுக்காய் காத்திருந்து புது பெலன் பெற்றிடு

தேவையற்ற உறவுகளை தேவப் பெலத்தால் விட்டிடு

 

தேடி வந்தவரை தள்ளி விடாதே - நீ

தேடிப் போன பாவத்தினின்று உன்னை மீட்டெடுத்தவரை மறந்திடாதே

 

தேவையுள்ள தேசத்தில் உனக்கு திறந்த வாசல் உண்டு

தேங்கி போன உன் ஆவிக்குரிய வாழ்வில் எழுச்சி உண்டு

 

தேற்றறவாளனின் உதவியை எப்பொழுதும் நாடிடு - உன்னை

தேற்றி தேசத்துக்காய் பயன்படுத்துவார் என்ற நம்பிக்கை உண்டு

 

தேசத்தின் பாவத்தை தேவனின் பாரத்தை சிலுவையின் வெற்றியை சிந்திய இரத்தத்தினை பார்த்திடு

தேகத்தை பரிசுத்தத்திற்காகவும் பரமனின் சேவைக்காகவும் ஒப்புக்கொடுத்திடு


Wednesday, March 13, 2013

வாலிபனின் ஜெபம்–5 (Youth Prayer)

Praying Youth

மென்மையானவரே உம் மெல்லிய சத்தத்திற்கு செவிக் கொடுக்கவில்லையே

பரிசுத்தமானவரே உம் பரிசுத்த அழைப்பில் பங்கு கொள்ளவில்லையே

 

மகிமையின் தேவனே என் இருதயத்தை மாசுப் படுத்தி விட்டேனே

பரிசுத்த ஆவியே உம்மை நான் துக்கப்படுத்தி விட்டேனே

 

மன்னவனே என் மனதை தீய பாவ ஆளுகைக்கு உட்படுத்தினேனே

பலியானவரே என் பாவச் செயலால் உம் பலியை வீணாக்கினேனே

 

மரித்துயிர்த்தெழுந்தவரே என் மனதை சாவானவைகளில் செலுத்திவிட்டேனே

பாதாளாமிரங்கினவரே என் மனதை கீழானவைகளுக்கு விட்டுக்கொடுத்துவிட்டேனே 

 

மக்களுக்காய் கண்ணீர் சிந்த வேண்டிய நான் எனக்காய் அழுகிறேனே

பரிசுத்தத்திற்காக அழைக்க வேண்டிய நான் பரிசுத்தம் கெஞ்சுகிறேனே

 

 

மாசில்லாதவரே என் பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டுகிறேன்

பின்மாறிப் போய்விட்டேன் பின்மாரிக்காய் வேண்டுகிறேன்

 

 

மோசமாக்கப்பட்ட பூமியின் மீது அசைவாடின ஆவியானவரே

பாவ மோசத்தால் கெட்டுப்போன என் இருதயத்தின் ஆழத்தை ஆட்கொண்டுவிடும்

 

மனுக்குலமும் ஜீவன்களும் வாழ மீண்டும் இப் பூமியை மாற்றினவரே

பாழாய்ப் போன என் இருதயத்தை மறுரூபப்படுத்திவிடும்

 

முற்றிலும் இருளாயிருந்த பூமியில் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றவரே

பலவித சோதனைகளால் இருளாய் போன என் வாழ்வில் வெளிச்சத்தை கட்டளையிட்டுவிடும்

 

மாற்றப்பட்டு ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் காணப்பட்ட பூமியை சீர்ப்படுத்தினவரே

பரிசுத்த வாழ்வில் நிலைத்திட கனித் தந்திட நீர் நல்லது என கண்டிட சீர்ப்படுத்திவிடும்