Wednesday, November 26, 2014
Monday, November 24, 2014
வாலிபனின் ஜெபம்–12: விட்டு விட்டேன்
கல்வாரியை பாடிவிட்டு எப்படி நான் கயவனாய் இருந்தேன்?
பரிசுத்தர் என்று போற்றிவிட்டு எப்படி நான் பரிசுத்தம் இழந்தேன்?
மார்போடு அனைத்தவரை விட்டு விட்டு எப்படி நான் மாயலோகத்தை தேடிப்போனேன்?
மகிபனை மகிமைப் படுத்திவிட்டு எப்படி என் மனம் மாசுப்பட விட்டு விட்டேன்?
வருகையை பேசிவிட்டு வருபவரைத் தேடாமல் எப்படி இருந்தேன்?
வின்னுக்குரியவரை போற்றிவிட்டு வீனானவைகளை ஏன் நாடிப் போனேன்?
உதடுகளால் பாடிவிட்டு உள்ளத்தால் ஏன் தூரப்போனேன்?
தூயவர் என்று துதித்துவிட்டு உள்ளத்தால் ஏன் துரோகம் செய்தேன்?
தினம் காலை மாலை ஆராதனையும் வேத வாசிப்பையும் விட்டு விட்டேன்
திடம் பெற பரிசுத்தாவியின் நிறைவை நாடாமல் இருந்து விட்டேன்
கண்களுக்கு காவல் வைக்க மறந்து விட்டேன்
கண்ணியமாய் வாழ கல்வாரி அன்பில் நிறைய மறந்து விட்டேன்
விட்டு விட்டவைகளை விடாமல் செய்ய தீர்மானித்து விட்டேன்
வருகையில் சேர்ந்திட அநேகரை சேர்த்திட வருபவரை நாடிவிடேன்
Tuesday, July 29, 2014
வாலிபனின் ஜெபம்–11: வெறுமையான என்னை…
வெறுமையான என்னை வெறுத்துத் தள்ளாதேயும்
பாவியான என்னைப் பிரித்து விடாதேயும்
அடிமையான என்னை அலட்சியப்படுத்தாதேயும்
சாரம்போன என்னை சோர்வுரச்செய்யாதேயும்
வெறுத்துத் தள்ளவா என்னை வெறுமையாக்கினேன்?
பிரித்து விடவா என்னை பலியாக்கினேன்?
அலட்சியப்படுத்தவா அந்தக் கொடூரக் கோளம் அடைந்தேன்?
சோர்வுரச்செய்யவா நான் சிலுவையைச் சுமந்தேன்?
உம்மை விட்டு நான் தூரம்போனவன்
அவலட்சனங்களில் நான் அகப்பட்டவன்
உம் அன்பிற்கு நான் தகுதியற்றவன்
ஆண்டவரே உமக்குத் துரோகம் செய்தவன்
உன்னை எனதாக்கவே பரம்மிரங்கி வந்தேன்
உன்னை விடுவிக்கவே நான் சிறைப்பட்டேன்
உன்னை நீதிமானாக்கவே என் ஜீவன் ஈன்றேன்
உன்னை மாற்றவே நான் மாண்டு உயிர்த்தெழுந்தேன்
சிலுவையின் தியாகத்தைத் தியானித்திடுவேனே
சிந்தின திருஇரத்தத்தை மறந்திடேனே
சீர்கெட்ட வாழ்வைச் சீர்தூக்கிப் பார்ப்பேனே
சிறந்த வாழ்வு வாழச் சிலுவையன்டை வருவேனே
பெற்ற மன்னிப்பின் விலைக்கிரையத்தை மறந்திடாதே
பின்நிலைமை மோசமாகாதபடி இனி பாவம் செய்யாதே
பரிசுத்தாவியின் நிறைவில் தினமும் வாழ்ந்திடு
பரிசுத்தத்தையே வாஞ்சித்து பாரில் சாட்சி பகர்ந்திடு
Saturday, July 5, 2014
வாலிபனின் ஜெபம்–10: தகாதவைகளைத் தள்ளிவிட…
தகாதவைகளைத் தள்ளிவிடக் கிருபைத் தாரும்
தந்தப் பரிசுத்தாவியை துக்கப்படுத்தாதிருக்கத் திடமனந்தாரும்
தீர்மானங்களில் நிலைத்து நிற்கப் பெலன் தாரும்
திருச்சித்தம் மாத்திரம் நிறைவேற்றும் எண்ணந்தாரும்
தமக்காய் வாழாமல் உமக்காய் வாழும் மனந்தாரும்
தீய இச்சையல்ல திருச்சித்தத்தை நாடிடும் எண்ணந்தாரும்
தீய தருணங்களை ஆவியின் பெலத்தால் மேற்கொள்ளச் செய்யும்
திருப்தியை உம்மில் மாத்திரம் தேடிட செய்திடும்
தூங்கித் தூங்கி பெலனை இழக்காமல் இருக்க உணர்வு தாரும்
தூக்கத்தைக் கலைத்து துதியோடு ஜெபத்தில் காத்திருக்க ஆர்வம் தாரும்
தினமும் உம் சமூகத்தில் தரித்திருக்கும் ஒழுக்கம் தாரும்
திரு வசனத்தைத் தியானித்துத் திடம் பெரும் வாழ்வு தாரும்
தூபமாய் என் வாழ்வு இயேசுவே உம் நறுமணம் வீசச் செய்யும்
திரியாய் தினந்தோறும் உமக்காய் எரிந்து பிரகாசிக்கச் செய்யும்